தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்
கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் என்பதும் ரசிகர்கள் அறிந்த தகவல்தான். மூன்று மொழி படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் நடிக்க அழைத்து வரப்பட்ட ராம், இந்த மூன்று மொழிகளால் ஏற்படும் தாமதத்தால் ஒரு நாளைக்கு ஒரு ஷாட்டில் மட்டுமே நடிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருந்தினாராம். எனவே அவர் இப்படத்திலிருந்து நாகரீகமாக விலகிக் கொண்டார். இதன் காரணமாக தெலுங்கிலும் ஜீவாவையே நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தார் கவுதம். ஆனால் சமீபத்தில் ஹிட் ஆகியிருக்கும் தெலுங்கு படமான பிள்ளை ஜமீன்தார் படத்தின் ஹீரோ நானி மீது அவரது கண் போனதாம். ஏற்கனவே இவர் தயாரித்த வெப்பம் படத்திலும் இவர்தான் ஹீரோ. அவரை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இப்போது.
ரா ஒன் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டிலும் அப்படத்தை அதிக அளவில் வெளியிடும் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு எங்கே நடந்தது என்பதை கூட ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது ஒரு தகவல் மட்டும் வெளியே கசிந்திருக்கிறது. அவுட்டோரில் படம் எடுக்கும் போது அது அவரது உடல்நிலைக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதால் ஏ.சி.புளோரில் எடுக்க திட்டமிட்டார்களாம்.
பின்னணியில் இடம் பெறும் சூழல்களையும், அமைப்புகளையும் தனியே ஃபிட் செய்து கொள்ளலாம் என்பது ஷாருக்கின் கணக்கு. அதனால் இந்த காட்சியை கிரீன்மேட் பின்னணியில் படம் பிடித்துக் கொண்டாராம். அவர் நினைத்த மாதிரியே காட்சி நன்றாக வந்திருப்பதால், இப்படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றில் ரஜினியின் காட்சிகளையும் இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளை குறைத்து அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடிப்பதனால் சினிமாவின் தரம் சீர்குலைந்துவி்ட்டது என்று நடிகை சோனாலி பிந்த்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது,
மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப்பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.
நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றார்.
இப்படிப் பேசும் சோனாலி ஒரு காலத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துக் களைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது,
மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப்பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.
நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றார்.
இப்படிப் பேசும் சோனாலி ஒரு காலத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துக் களைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷை வைத்து உத்தமபுத்திரன் என்ற படத்தை தயாரித்த ரமேஷ், அடுத்து சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் கோடிக்கணக்கில் செலவு செய்து, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தோடு தரமான படங்களை உருவாக்கினாலும், ரசிகர்கள் அவற்றை பார்க்க தியேட்டர்கள் தரமானதாக இல்லை என்று ஒஸ்தி படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் ஆதங்கப்படுகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கு என்ற சில நெறிமுறைகள் உள்ளன. படங்களை தெளிவாக காட்ட துல்லியமான புரஜக்டர்கள் பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் இருக்கிறது. அதாவது, 4கே அளவிலான புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான, எஸ்.எம்.பி.டி.ஈ, வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும். உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன. ஆனால் பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படுவதில்லை. ஒரு சில மல்டிபிலக்ஸ் தியேட்டர் தவிர, அநேக தியேட்டர்களில் 1கேவுக்கும் குறைவான புரஜக்டர்களே உள்ளன. இதனால் படங்கள் தெளிவாக தெரிவதில்லை.
அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முறையில் படங்களை பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட, கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மென்மையான செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுவதில்லை. தியேட்டகள் தரமில்லாமல் இருக்கிறது.
திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது. இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்பதுதான். ஆனால் இந்தியாவில் இவை சுதந்திரமாக செயல்படுகின்றன. இது ஏன்?
சில நிறுவனங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன். திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. திரையுலகை காப்பாற்ற, ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கு என்ற சில நெறிமுறைகள் உள்ளன. படங்களை தெளிவாக காட்ட துல்லியமான புரஜக்டர்கள் பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் இருக்கிறது. அதாவது, 4கே அளவிலான புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான, எஸ்.எம்.பி.டி.ஈ, வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும். உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன. ஆனால் பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படுவதில்லை. ஒரு சில மல்டிபிலக்ஸ் தியேட்டர் தவிர, அநேக தியேட்டர்களில் 1கேவுக்கும் குறைவான புரஜக்டர்களே உள்ளன. இதனால் படங்கள் தெளிவாக தெரிவதில்லை.
அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முறையில் படங்களை பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட, கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மென்மையான செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுவதில்லை. தியேட்டகள் தரமில்லாமல் இருக்கிறது.
திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது. இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்பதுதான். ஆனால் இந்தியாவில் இவை சுதந்திரமாக செயல்படுகின்றன. இது ஏன்?
சில நிறுவனங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன். திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. திரையுலகை காப்பாற்ற, ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
Sundar C and Vadivelu
வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல.
அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு.
தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட இந்த ஐந்து மாத காலத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருந்தார் வடிவேலு. நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.
இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது!
நகைச்சுவைப் புயலே, வாங்க!
வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல.
அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு.
தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட இந்த ஐந்து மாத காலத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருந்தார் வடிவேலு. நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.
இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது!
நகைச்சுவைப் புயலே, வாங்க!
இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.
ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.
ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்," என்றார்.
ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.
ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்," என்றார்.
ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







