•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

சர்வதேச தரத்தில் வீரர்கள் பிரகாசிப்பத்ற்கு போதிய வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுமா?

மக்கள் நடமாட்டம் குறைவான முனியப்பர் வீதியில் அரச, இராணுவ வாகனங்கள் விரைந்தோடின. நீண்ட நாள்களாய் சீரமைக்கப்படாத துரையப்பா மைதானம் விரைவாக சீரமைக்கப்பட ஆரம்பித்தன. வீதியால் சென்ற மக்கள் யாராவது முக்கிய பிரமுகர்கள் வரப்போகிறார்களா எனப் பேசிக் கொண்டி ருந்தனர். ஆனால் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் 15 வருடங்களுக்கும் மேலாக யாழ். நகரில் நடத்தப்படாது இருந்த வடமாகாண விளையாட்டுப்போட்டிதான். கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நடைபெற்றன. மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மாகாண மட்டப்போட்டிக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா , கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மூவின வீரர்களும் ஓன்றாகக் கூடினர்.

18 ஆம் திகதி காலை முதல் மைதானத் துக்குள் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் 5 மாவட்ட வீரர்களும் கூடத்தொடங்கினர். பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டிகள் பிரதமவிருந்தினர்களின் வருகையை அடுத்து உற்சாகமாக ஆரம்பித்தன.
பிரதம விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக அழைத்து வரப்பட 5 மாவட்டங்களின் அணிவீரர்களும் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்ட வேளை மைதானத்தை சூழநின்ற மழலைகளின் கையில் இருந்தும் வண்ண வண்ணப் பலூன்களும் பறக்க விடப்பட்டன.
இதேவேளை மைதானத்துக்குள் வருகை தந்துகொண்டிருந்த பார்வையாளர்கள் நுழைவாயிலில் நின்றிருந்த பொலிஸாரால் பரிசோதனை செய்து அனுப்பப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் மைதானத்தின் வெளியே நின்று போட்டியைக் கண்டு ரசித்தார்கள்.
யாழ். மண் விளையாட்டுத்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே பாரம்பரியக் கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது என்பதைப் பறைசாற்றும் முகமாக போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் அமைந்தன.
முதல் நாள் நிகழ்வுகளாக 1500 மீற்றர் ஆண், பெண்களுக்கான ஓட்டப்போட்டியும், மன்னார் யாழ்ப்பாணம் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியும் நடை பெற்றன. ஓட்டப் போட்டியில் வவுனியாவின் வீரர்களான சிவநேசன், பன்னவெல ஆகியோர் முதலிரண்டு இடங்களையும் பெற மூன்றாமிடத்தை யாழ். வீரர் நேசரூபன் பெற்றார். பெண்களுக்கான ஓட்டத்தில் வவுனியாவின் வீராங்கனைகளான ஹேரத், எழிலரசி ஆகியோர் முதலிடங்களைப்பெற மூன்றாம் இடத்தை யாழ். வீராங்கனை மேர்ஷி தட்டிச் சென்றார்.
இறுதியாட்டமாக மன்னார்யாழ்ப்பாணம் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டம் நடைபெற்றது. நேரம் போதாமையினால் ஆட்டத்தின் மொத்த நேரம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டன. ஆனால் இருஅணியின் வீரர்களிடமும் "குழு மனப்பாங்கு" என்பது குறைந்தளவாகவே காணப்பட்டது. மன்னார் அணியின் டினேஸ் ஒரு கோலைப் பெற யாழ். அணியால் எவ்வளவு முயன்றும் கோல் பெற முடியாததால் 1:0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. மொத் தத்தில் இது ரசிகர்களுக்கு ஒரு காட்சி உதை பந்தாட்டமாகவே அமைந்ததே தவிர போட் டியாக இருக்கவில்லை.
உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடிய யாழ். மாவட்ட அணியில் குறித்த ஒரு கழகத்தின் வீரர்களே பெரும்பான்மையாக இடம் பெற்றிருந்தனர். யாழ். மாவட்டங்க ளில் உள்ள உதை பந்தாட்ட அணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணியாக யாழ். அணி இருக்கவில்லை . இது ரசிகர்கள் மத்தி யில் பல் வேறு விமர்சனங்களை உண்டு பண்ணியது.
முதல் நாள் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக முடிவடைந்தன. வெளிமாவட்ட வீரர்களிடம் நாம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்த போது அவர்கள் அனைவரும் பொது வாகக் கூறியது போக்குவரத்து தொடர்பான தாகவே அமைந்தது.
மன்னார் வீரர் சதீஸ் என்பவர் கூறுகை யில் "நாங்கள் நேற்று மாலைதான் (17.09.2009) யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தோம். அதனால் எங்களால் சரியாக விளையாட முடியவில்லை" என்றார். ஏனெனில் நீண்டதூரப் பயணமும் சீரற்ற பாதையும் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும் எனினும் யாழ்.அதிகாரிகள் தம்மைச் சிறந்தமுறையில் உபசரித்ததாகக் கூறினார்.

முதல்நாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2 ஆம் நாள் போட்டிகள் மறுநாள் சனிக்கிழமை ஆரம்பமாகின. ஆனால் வீரர்களையும் போட்டி நடுவர்களையும் தவிர வேறு எவரையும் மைதானத்தில் காணமுடியவில்லை. பல கட்டங்களாகப் போட்டிகள் நடைபெற்றன. வீரர்கள் தமது முழுத் திற மையையும் வெளிப்படுத்தி விளையாடியபோதும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பார்வையாளர்கள் எவருமே இருக்கவில்லை என்பதே வேதனைக்குரிய விடயங்களாகும்.
இரண்டாம் நாளில் தடகளப் போட்டிகள் பலவும் நடைபெற்றன. மைதானத்தின் பல பகுதிகளிலும் கபடி, வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், தட்டெறி தல், குண்டெறிதல் என நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆண், பெண்களுக் கான மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

சொந்த மைதானங்களில் யாழ்.வீரர்கள் பிரகாசிப்பார்கள் எனப் பலராலும் எதிர்பார்க் கப்பட்டபோதும் அவர்கள் பெரிதளவில் ஜொலிக்கவில்லை என்றே கூறலாம். ஆனாலும் குழுநிலைப் போட்டிகளில் யாழ்.மாவட்டப் பெண்கள் சிறப்பாகவே செயற்பட்டனர். அஞ்சல் ஓட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந் தாட்டம் என்பவற்றில் முதலிடத்தைப் பெற்றதுடன் கிரிக்கெட்டிலும் அவர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை வழங்கினர்.
பெண்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகளவான உதிரிகளை வழங்கியபோதும் இறுதிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தனர். சிறப்பான துடுப்பாட்டத்தையும், களத்தடுப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர். இருந்தபோதும் வவுனியா அணி வெற்றி பெற்றதால் அரையிறுதியுடன் வெளியே றியது.

10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் யாழ். வீராங்கனை மேர்ஷி ஒரு செக்கனில் முதலிடத்தைத் தவறவிட்டது பலரையும் ஏமாற்ற மடைய வைத்தது. இதில் வவுனியா வீராங்கனை ஹேரத் 47 நிமிடங்கள் 40 செக்கன் களில் ஓடித் தங்கம் வெல்ல மேர்ஷி 47 நிமி டங்கள் 41 செக்கன்களில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்றாம் நாள் ஆட்டங்கள் 19 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்தன. இப்போட்டி களிலேயே யாழ்.வீர வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் யாழ்.மாவட் டம் முன்னிலை பெற்றது.

முடிவடைந்த மாகாண மட்ட விளையாட்டு விழா
வடக்கு வீரர்களுக்கு சிறந்த ஆரம்பமாக அமையட்டும்

பிற்பகல் 3 மணிக்கு பிரதம விருந்தினர்கள் வருகைதர பாரம்பரிய கலைகள் காட்சிகளாய் விரிந்தன. ஆனால் திட்டமிடப்பட்ட நேரங்களில் போட்டிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதனால் போட்டிகளை நடத்துவதில் காணப்பட்ட இழுபறி நிலைகள் வெளிப்படையாகத் தெரிந்தன.
மாலை 6 மணியளவில் மீண்டும் அணி வீரர்கள் ஒன்றிணைய பரிசு வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதமவிருந்தினர் களாகக் கலந்துகொண்ட சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் முதலிடம் வென்ற யாழ்.மாவட்டத்திற்கு வெற்றிக்கேடயம் வழங்கிவிட்டு விடைபெற்றனர்.

தொடர்ந்து அரச அதிபர் கே.கணேஸ், மாகாண அமைச்சின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தொடர்ந்து கேடயங்கைள வழங்கினர். பின்னர் இளங்கோவன் அடுத்த வருட மாகாண விளையாட்டு விழா கிளி நொச்சியில் நடைபெறும் என அறிவித்தார். பின்னர் தேசிய, மாவட்டக் கொடிகள் இறக் கப்பட 3 நாள் திருவிழா நிறைவடைந்தது.

வடமாகாண விளையாட்டு விழாவில் பல விளையாட்டுகள் இடம்பெற்றபோதும் பலரும் எதிர்பார்த்த சில விளையாட்டுக்கள் இடம்பெறாதது வீரர்களுக்கும் ரசிகர்களுக் கும் ஏமாற்றத்தையே வழங்கியது. இவ்வகை யில் கூடைப்பந்தாட்டம், நீச்சல், படகோட் டும் போட்டி, மரதன் ஓட்டம், ஹொக்கி, கடினபந்து துடுப்பாட்டம், சைக்கிள் ஓட்டம், ரென்னிஸ் என்பவற்றுடன் வேறு சில போட்டி களும் நடைபெறவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினர்கள் சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு இவ்வீரர்களுக்கு வாய்ப்புக ளும், பயிற்சிகளும் ஏற்படுத்திக் கொடுக் கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் இப்போட்டிகளில் சில நடைபெறாததற்கான காரணங்களில் ஒன்றான அவற்றுக்குப் பொருத்தமான ஆடுகளங்களோ வசதிகளோ இல்லையே என்பதாகும். எனவே இவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே சம்பந்தப்பட்டவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

வடமாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் அணிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருந்தன. ஆனால் இவ்விழாவில் பங்குகொண்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட வீரர்களினதும் பார்வையாளர்களினதும் கேள்வியாக அமைவது வவுனியா நலன்புரி நிலை யங்களில் தங்கியிருந்த வீரர்கள் ஏன் வர வில்லை? என்பதே.

யாழ்ப்பாணத்தின் நலன்புரி முகாம்களில் இருந்து வருகை தந்த வீரர்கள் தமக்குப் போதியளவு பயிற்சிகள் கிடைக்கவில்லை யென்று கூறியதுடன் தமது சக வீரர்கள் கலந்துகொண்டிருந்தால் தாமும் ஏனைய அணிகளுக்கு சளைக்காது போட்டியிட்டிருப் போம் என்றனர்.
ஆனால் இன்று எழுந்துள்ள கேள்வி தேசியமட்டப் போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வார்களா? என்பதுடன் அடுத்தவருடம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் விளையாட்டு விழா சாத்தியமானதா? என்பதுமே.

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.