Pages

Nov 15, 2010

தேசிய விருது : ஜனாதிபதியிடம் பெற்ற போடி மூதாட்டி

போடி : குழந்தைகளுக்கு சிறந்த சமூக சேவை மற்றும் தனிநபருக்கான சமூக சேவகி தேசிய விருதை, போடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிவகாமிக்கு குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.தேனி மாவட்டம், போடி புதுக்காலனி பகுதியில் வசிப்பவர் சிவகாமி (82). 37 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நேரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, அதன் கிளைகளாக நேரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், குழந்தைகள் காப்பகங்கள், அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளி, மகளிர் மன்றம் போன்றவற்றை அமைத்து, தலைவராக உள்ளார். 130 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News