![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisHKDjeC8ExKKVsRHDIQRdcQ1hBK6UkrDztaG83b3q8liCzbYutfKUtm5FkZDjusI6rpXTfDPLbdNHlwm5kZf52aUMNzqDSaOLUsCrMTliWhzo1Wxo7z-2ecvvdCtEBduWZeEhsqMskX4v/s400/water-bottles-caps.jpg)
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால்
இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை
நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த
எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgod9cmVDGnpalGb2yQ8-vQOjD_2V_VuJJnCzIrZhs3ZdGnhBxi9BdxtUvecdPfXbzvCArg0LC-U8fvjHBKuYF9Ob4qyyt0sG1JIUZktzD5bD1CBXbgyfBKGbtqydgI8bBbj8w1Y0Hn0PiP/s1600/2434337918_e1e84b0c21.jpg)
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்
இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும்
தீங்கு விளைவிக்க கூடியவை .
.இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்