•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!




வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டிஓணாண் பிடித்து
ஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு 
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி 

கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !
மனசு தொட்டுவாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?





மௌசு தொட்டு 
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கைதொலைந்து போகுமோ ?

சொந்த பந்தஉறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன்
நித்தமும்!

 
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
  

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.